தமிழக அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை – வரைமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கான தகுதி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. இந்த பள்ளியில் இசை சம்பந்தமான குரலிசை, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பல இசை சாதனங்களை கொண்டு கலை அரங்கேற்றத்திற்கான அனைத்து இசைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டுகின்றன. அந்த வகையில் இந்த 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவியருக்கான புதிய சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3,500 உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இசைப்பள்ளியில் இசை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான இந்தாண்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. அதன் படி குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவர்கள் 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நாதசுரம், தவில், தேவாரம் ஆகியவற்றை கற்றுக்கொள்ள எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். தொடர்ந்து 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் 25 வயது உள்ளவர்கள் வரை இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சி காலம் 3 ஆண்டுகள். இதில் காலை 10 மணி முதல் 4 மணி வரை பயிற்சிக்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அரசு சான்றிதழ் வழங்கப்படும் இந்த படிப்பில் அரசு துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்புகளும் மேலும் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நிகழ்ச்சி மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். இதை தவிர கூடுதல் சலுகையாக இலவச பஸ் கட்டணம், தங்கும் இடவசதி, சீருடை, காலணி, சைக்கிள் மற்றும் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.400 உள்ளிட்டவை அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். அதனால் இசைப்படிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் திலகர் திடலில் உள்ள அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் அணுக வேண்டும்’ என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.