தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – பணிகள் தொடக்கம்!
தமிழகத்தில் நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்பு நடைபெறவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி, பொதுத்தேர்வை அரசு ரத்து செய்தது. அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
தமிழகத்தில் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 33 திட்டங்கள் – முதல்வர் ஒப்புதல்!
இருப்பினும், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு, உதவும் விதமாக மாற்று முறையில் மதிப்பீடு வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, நேற்று தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண்கள் வெளியிடுவதற்கு முன்பாகவே தனியார் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வழங்கி வந்தது. மதிப்பெண் இல்லாமல் மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றனர்.
TN Job “FB Group” Join Now
தற்போது மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளதால், மீண்டும் மதிப்பெண்ணை பதிவு செய்து, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் அறிவுறுத்தியுள்ளது. அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் இன்னும் பெறப்படவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின் படி, ஜூலை 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். அரசு கல்லூரி முதல்வர் ஒருவர், நடப்பாண்டிற்கான முதுகலை படிப்பிற்கு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. ஆனால் அரசு கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. எனவே முதுகலை மற்றும் இளநிலை மாணவர் சேர்க்கை பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.