தமிழகத்தில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26 வரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் கடந்த ஆண்டுக்கான பருவத் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டதால் மதிப்பெண் சான்றிதழ் வர கால தாமதம் ஏற்பட்டது.
ATM ல் பணம் எடுக்க சேவை கட்டணம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் இருந்தது. இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த கல்லூரிகளும் விண்ணப்பங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூலை 26 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.