தமிழகத்தில் +1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் +1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் +1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் +1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை – அரசுக்கு கோரிக்கை!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தாமதமாக திறக்கப்பட்ட பள்ளிகளில் தற்போது +1 மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. தற்போது நோய் தொற்று குறைந்த பிறகே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளுக்காக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிக்கு திரும்பும் படி அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்காகவும், புத்தகங்கள் வழங்குவதற்காகவும் இன்று (ஜூன் 14) முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

தமிழகத்தில் பொதுமக்களுக்காக அரசு பேருந்துகள் தயார் – ஏஐடியூசி அறிவிப்பு

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 11 ஆம் வகுப்புகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களும் பள்ளிக்கு நேரில் சென்று புத்தங்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று காலை முதல் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி மாணவர்கள், 9 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு குரூப்கள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மனோகரன், பள்ளிக்கல்வித்துறை ஆணையாளருக்கு எளிதியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் பள்ளி தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வருவதில் அரசுக்கு ஒரு தெளிவான கருத்து இல்லை. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தகங்களை வழங்குவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து சேவைகள் இன்னும் துவங்கவில்லை. மேலும் இப்பணிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றனர். இந்த சூழலில் இவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுவாக +1 மாணவர் சேர்க்கையை ஆசிரியர்கள் தான் நடைமுறைப்படுத்துவது வழக்கம். ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர முடியாததை போல மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் பல சிக்கல்கள் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டியுள்ளதால் நோய் தொற்று பாதிப்பு குறைந்த பிறகே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பானதாகும். மேலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் தான் மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டும். அது தான் சரியானதாக இருக்கும். அதனால் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே இந்த வேலைகளை அரசு துவங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!