தமிழகத்தில் பொறியியல், கலை & அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ள நிலையில் முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!
இதனால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க குழப்பம் எழுந்துள்ளது. இதற்காக ஆலோசனை குழு அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் பொறியியல் பி.இ, கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை வழங்க முதல்வருடன் ஆலோசித்த பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும். சேலம் பெரியார், மதுரை காமராஜர், அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு பற்றி விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.