தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது உள்ள கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் பரவத் தொடங்கி வைரஸ் இன்று வரை அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. இதற்கிடையில் சற்று பாதிப்பு குறைந்த போது மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 4 ஆண்டு பி.எட்., படிப்புகள் ஒத்திவைப்பு – என்.டி.சி விளக்கம்!!
பிறகு இராண்டாம் அலை பரவல் அதிகரித்து வந்ததால் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது 11ம் வகுப்பு மாணவர்கள் செய்கை குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதற்கு அவர், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசித்துள்ளோம். அதிகளவு மாணவர்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறித்து திட்டமிட்டு இருந்தோம். இந்த ஊரடங்கு காரணத்தால் செயல்படுத்த முடியவில்லை. தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கிற்கு பிறகு 11ம் வகுப்பு சேர்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.