தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை தொடக்கம் – முதல் குரூப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம்!!
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அதிக அளவிலான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். மேலும் முதல் குரூப்பில் மாணவர்கள் சேர்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 1:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் குறைந்து வருவதால் இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் தமிழகத்தில் ஜூன் மாதம் 3ஆம் வாரம் முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருந்தார். இதை அடுத்து தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.
6 கோடி தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – நிபுணர்கள் அச்சம்!!
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அதிக அளவிலான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு பள்ளிகளை நாடி வருகின்றனர். தற்போது இதுகுறித்து பெரம்பூர் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் அவர்கள் தெரிவித்ததாவது, பள்ளிகளில் தற்போது பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. மாற்று சான்றிதழ்கள் இல்லாவிட்டாலும் மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலர் விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.தமிழக அரசு 20 சதவிகித மாணவர்களை கூடுதலாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதை அடுத்து மாணவர்கள் கேட்கும் பாடப்பிரிவுகளை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதிக அளவிலான மாணவர்கள் முதல் குரூப்பை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் எந்த பிரிவில் சேர்ந்து படித்தால் நல்லது என்று ஆலோசனை வழங்க தனி ஆசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.