திருப்பூர் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை தொடக்கம்!
இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நாளை (ஆகஸ்ட் 25ம் தேதி) தொடங்குகிறது. அதனை தொடர்ந்து திருப்பூர் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. நோய்த்தொற்றின் பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து தற்போது நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்போது திருப்பூர் – அவினாசி அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நாளை அதாவது 25ம் தேதி தொடங்குகிறது.
IND vs ENG 3வது டெஸ்ட் : இந்தியாவுடன் மோதப்போவதில்லை, பாடம் கற்றுக் கொண்டோம் – ஜோ ரூட்!
நாளை முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விண்ணப்பதாரர்கள் பெறப்பட்ட குறுஞ்செய்தி தகவலுடன் மாணவர், பெற்றோர் கல்லூரிக்கு வரவேண்டும். அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மேலும் சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி., மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில் வணிகவியல் மற்றும் வணிகவியல் (பி.ஏ.,) பிரிவில், தலா 15 இடங்கள் நிரப்பப்படும் என கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதே போல் மற்ற துறைகளுக்கு 26ம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும் எனவும் காலை 10 பேர் மற்றும் மாலை 10 பேர் என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்படும், பின் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஆன்லைன் மூலம் நடக்க உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.tngasapg.in மற்றும் www.tngasapg.org என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அட்மிஷனுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் www.cgac.in என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.