தமிழகத்தில் LKG, UKG மாணவர்களுக்கான சேர்க்கை – கல்வி இயக்குனர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நடைபெறாமலே இருந்த நிலையில் தற்போது மாணவர் சேர்க்கையை அந்தந்த பள்ளிகளிலேயே தொடங்கலாம் என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 2,381 அங்கன்வாடி மையங்கள் இருக்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 1 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13-ஆம் தேதியிலிருந்து வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால், எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படாமலே உள்ளதால் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை தொடர்ந்து எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த ஆண்டில் மட்டுமே சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதிலும் குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த புதிதாக இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கையை ஒன்றிய நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ.1 லட்சம் நிதியுதவி – யார் யாருக்கு வழங்கப்படும்? அரசாணை வெளியீடு!
மேலும், 3 வயது பூர்த்தி செய்யப்பட்ட குழந்தைகளை மட்டுமே LKG வகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும், நான்கு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை UKG வகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் உள்ள ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த கூடுதல் வகுப்பறை வசதி இல்லை எனில் போதுமான நிதி அரசிடமிருந்து வழங்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக பள்ளிகளில் தொடங்கும்படி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.