தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக சீரமைப்பு – முக்கிய முடிவு வெளியீடு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆட்சியில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன் நிர்வாக சீரமைப்பு பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் 128 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
நிர்வாக சீரமைப்பு:
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கீழ் 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள், வருவாய் மாவட்டத்துக்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தன.தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ், 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும், 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்கள் என மொத்தம் 67 அலுவலகங்கள் இயங்கி வந்தது. இந்த நிலையில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் கடந்த ஆட்சியில் 67 ஆக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள், 128 ஆக அதிகரிக்கப்பட்டது. அத்துடன் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தொடக்க கல்வி இயக்குனரகத்தை பள்ளி கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கென சுயநிதி பள்ளிகள் இயக்குனரகம் துவங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள தி.மு.க தலைமையிலான அரசு நிர்வாக சீரமைப்பு மீண்டும் மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மீண்டும் குடும்பத்தினரிடம் இணையும் கதிர் & முல்லை – அதிரடி திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
இந்த அரசு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஏனெனில் முந்தைய நிர்வாக முறையை மீண்டும் அமல்படுத்த, கூடுதல் பணியாளர்கள், அலுவலர்கள் தேவை; இதற்கு நிதி செலவும் அதிகமாகும். அதனால் கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாக சீரமைப்புகளை ரத்து செய்வதற்கு, நிதித் துறை அனுமதி அளிக்குமாறு பள்ளிக்கல்வி துறை நீதித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது குறித்து, இரண்டு துறை அமைச்சர்களும் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்