தமிழக ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜன.18 கடைசி நாள்!
இடைநிலை/பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த அரசு பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 18 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக ஆதிதிராவிடர் நலப்பள்ளி வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் 2 பணியிடங்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கு என 7 பணியிடங்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ.10000/- மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பதவிக்கு ரூ.12000/- என சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.01.2023 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.