தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் தற்போது கூடுதல் ரயில்கள் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கூடுதல் ரயில் சேவை:
தமிழகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்றின் காரணமாக பல மாதங்களாக மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாக மீண்டும் மின்சார ரயில் சேவை இயங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் ரயில் சேவை என்பது முக்கிய பங்கு வகிப்பதனால் பொதுமக்கள் கூட்டமாக ரயில் சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 12 முதல் ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே கூடுதலாக பயணிகள் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு நாளையில் இருந்து திங்கள் முதல் சனி வரை கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
TN Job “FB Group” Join Now
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு தற்போது 57 ரயில்கள் இயக்கப்படும் நிலையில் அவற்றின் எண்ணிக்கை தற்போது 70 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேளச்சேரியிலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையானது 57 லிருந்து 70 ஆக மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ஞாயிற்று கிழமைகளில் இயங்கும் ரயில்களின் எண்ணிக்கை 38 லிருந்து 48 ஆக அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.