சென்னை – திருப்பதி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம்? பயணிகள் கோரிக்கை!

0
சென்னை - திருப்பதி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம்? பயணிகள் கோரிக்கை!
சென்னை - திருப்பதி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம்? பயணிகள் கோரிக்கை!
சென்னை – திருப்பதி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கம்? பயணிகள் கோரிக்கை!

இந்தியாவில் அதிகமான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை – திருப்பதி இடையே ரத்து செய்யப்பட்டுள்ள மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என தமிழக மற்றும் ஆந்திர மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு ரயில்:

இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் சாமானிய மக்களுக்கு ஏற்ற போக்குவரத்து வசதியாக ரயில் போக்குவரத்து விளங்குகிறது. மேலும் இதில் பயணிகள் கட்டணம் மற்ற போக்குவரத்து கட்டணங்களை காட்டிலும் குறைவாக இருப்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்கின்றனர். இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன.

இந்தியாவில் உள்ள ரயில்களில் பாதியளவு மின்சார ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் ரயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில் கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் கொரோனா பரவல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், திருத்தணி வழியாக திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் கடந்த ஆண்டு டிசம்பர் வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

ATM ல் பணம் எடுப்பதில் புதிய விதிமுறை – SBI அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், சப்தகிரி, கருடாத்திரி ஆகிய விரைவு ரயில்கள், சென்னை – திருப்பதி பயணிகள் ரயில் மற்றும் புதுச்சேரி – திருப்பதி, அரக்கோணம் – கடப்பா போன்ற ரயில்கள் மட்டும் மேற்கண்ட வழித்தடத்தில் சில மாதங்களுக்கு முன்பு இயக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து திருப்பதிக்கு ரத்து செய்யப்பட்டுள்ள மின்சார ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும், சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும் துரித மின்சார ரயில், மற்றும் காலை 7.00 மணிக்கு அரக்கோணம், ரேணிகுண்டா, திருப்பதி வழியாக நெல்லுார் வரை இயக்கப்பட்டு வந்த சாதாரண மின்சார ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் இரவு 7.10 மணிக்கு சென்ட்ரலில் இருந்து, திருப்பதி வரையிலான துரித மின்சார ரயில் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!