ஜூன் 22 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – மாநில முதல்வர் அறிவிப்பு!

0
ஜூன் 22 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் - மாநில முதல்வர் அறிவிப்பு!
ஜூன் 22 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் - மாநில முதல்வர் அறிவிப்பு!
ஜூன் 22 முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் – மாநில முதல்வர் அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் ஜூன் 22ம் தேதிக்கு பின்னர் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகள்:

கொரோனா தொற்று காரணமாக கர்நாடகா மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள 19 மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்தும், பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் குழந்தைகள் பாதிப்பு – சுகாதாரத்துறை விளக்கம்!

கர்நாடகா அரசு ஜூன் 21 நள்ளிரவு வரை பெங்களூருவில் பொது இடங்களில் 4 க்கும் மேற்பட்டவர்கள் கூட தடை விதிக்கும் பிரிவு 144 ன் கீழ் கட்டுப்பாடுகளை நீட்டித்தது. இதனால் விமான நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், ரயில் நிலையம் மற்றும் பொது இடங்களில் கூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

தீவிர ஊரடங்கு:

சிக்மகளூர், சிவமோகா, தாவங்கரே, மைசூரு, சாமராஜநகர், ஹாசன், தட்சிணா கன்னடம், பெங்களூரு கிராமப்புறம், மண்ட்யா, பெலகாவி மற்றும் கோடகு ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளதால் அங்கு ஜூன் 14 காலை 6 மணி முதல் முதல் 21ம் தேதி காலை 6 மணி வரை அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்துள்ளது. அங்கு தினசரி இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையும், ஜூன் 14 க்கு பிறகு வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் கிழமை 5 மணி வரை வார ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தளர்வுகள்:

பாகல்கோட், பல்லாரி, பெங்களூரு நகரம், பீடர், சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தார்வாட், கடக், ஹவேரி, கலாபுராகி, கோலார், கொப்பல், ரைச்சூர், ராமநகர், துமுகூர், உடுப்பா, உத்தரி, உத்தரா போன்ற 19 மாவட்டங்களில் ஜூன் 14ம் தேதிக்கு பின்னர் தளர்வுகள் அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பூங்காக்கள் மற்றும் தொழில்துறை பிரிவுகள் போன்றவை திறக்கவும், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் அதிக நேரம் திறப்பது, ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் அதிகபட்சம் இரண்டு பயணிகளுடன் செல்ல அனுமதி போன்ற தளர்வுகளை அளித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஜூன் 21ம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், இன்று மற்றும் நாளை மாநிலத்தில் உள்ள நிலமையைப் பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!