தமிழகத்தில் கூடுதலாக 3000 அரசு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
கூடுதல் பேருந்துகள்:
தமிழகத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்ததன் படி, நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மேலும் இலவசமாக பயணம் செய்யும் பெண்கள் குறித்த விவரங்களை கணக்கீடு செய்ய டிக்கெட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இலவச பேருந்துகளை எளிதில் அடையாளம் தெரிந்து கொள்ள பிரத்யேக வண்ணம் பூச பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே வீரசோழன் கிராமத்தில் 6 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் கூறுகையில், மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய துறைகளில் போக்குவரத்து துறையும் உள்ளது.
ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக முதல்வர் மக்களுக்கு தேவையான சிறப்பான நடவடிக்கைகளுடன் செயலாற்றி வருகிறார். பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் மூலமாக 40 சதவிகித பெண்கள் பயனடைவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது 60 சதவிகித பெண்கள் பயனடைந்து உள்ளனர். மேலும் ஏற்கனவே 13 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14 ஆயிரத்து 217 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் கூடுதலாக 3000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.