தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி சத்துணவில் தேங்காய் துண்டு!
தமிழக சட்டசபையில் இன்று நடந்த கேள்வி நேரத்தின் போது பள்ளிகளில் நடைமுறையில் உள்ள சத்துணவு திட்டம் குறித்து கேள்வி எழுப்பட்டது. அதில் சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
சத்துணவு:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதல் அப்போதைய முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதன் மூலம் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. பள்ளிகளில் பசியின்றி கற்றலை மாணவர்கள் தொடர்ந்தனர். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்துணவுடன் வாழைப்பழம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – இன்னும் 8 நாட்கள் மட்டுமே!
இது குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேங்காய் துண்டு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்ட பேரவையில் தற்போது கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. துறைவாரியான கேள்வி நேரத்தில் இன்று எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா சத்துணவு திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதாவது சத்துணவு திட்டத்துக்கு உயிர்ம விளை பொருட்களை வழங்க அரசு ஆவன செய்யுமா? சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்க அரசு முன் வருமா? என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், தமிழகத்தில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மையங்களுக்கு கொண்டைக் கடலை, சத்தான காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.10,000 மையங்களில் இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிடப்பட்டு, அவற்றை சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. அதோடு முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் சத்துணவு திட்டத்தில் தேங்காய் துண்டு வழங்குவது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் கூறியுள்ளார்.