தமிழகத்தில் கூடுதல் மின்வைப்பு தொகை வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின்சார வாரியம் சார்பில் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் இணைப்புகளுக்கு கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கிறது. இந்நிலையில் இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
கூடுதல் வைப்பு தொகை:
தமிழகத்தில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இரு ஆண்டுக்கு ஒரு முறையும், தொழிற்சாலைகளுக்கு ஆண்டுதோறும் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையானது மின் இணைப்பு பெறும் பொது குறிப்பிட்டிருந்ததை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் இணைப்புகளில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் காரணமாக வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்களிடம் இருந்து கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி ஏப்ரல் மாதம் நடைபெறாமல் ஜூலை மாதம் நடைபெற்றது.
சுகாதார பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு – அமைச்சர் அறிவிப்பு!
அதன் பின் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படவில்லை. இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற விதியின் கீழ் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த தொகையை வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்தது. ஆனால் மின்கட்டணம் உயர்த்தி 6 மாதங்களே ஆனதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று (ஜூன் 5) முதல் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கும் பணி துவங்கி இருக்கிறது. இந்த தொகை குறித்த விவரங்கள் மற்றும் இந்த மாதம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் ரசீதில் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Follow our Twitter Page for More Latest News Updates