8 மாவட்டங்களில் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அளித்து, புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி நோய் பாதிப்பு குறைவாக உள்ள 8 மாவட்டங்களில் மட்டும் முழு தடைகளையும் தளர்த்துகிறது.
ஊரடங்கு தளர்வுகள்
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதால், மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தோறும், பொது மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிட்டப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 க்கும் குறைவாக இருந்த தெற்கு சல்மாரா, மஜூலி, பொங்கைகான், சிராங் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – மின்தடை ஏற்படும் பகுதிகள்!
இந்த மாவட்டங்களில் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில், ஜூன் 4 முதல் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தனிநபர்களின் நடமாட்டத்திற்கான தடை நீடிக்கும். இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவைகள் மற்றும் பொது மக்களது பயணம் தடை செய்யப்பட்டிருக்கும். குறிப்பாக கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருவது கட்டாயமாகும்.
TN Job “FB Group” Join Now
இது தவிர அசாமின் சில மாவட்டங்களில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனவும், இருப்பினும் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலைமையை கவனத்தில் கொண்டு தொற்றுநோயை கட்டுப்படுத்த கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் போதுமான நடவடிக்கைகள் இன்னும் தேவைப்படுகிறது என அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நோய் பாதிப்புகள் குறைந்து வராத பட்சத்தில் மேலும் சில நடவடிக்கைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.