மாநிலத்தில் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகள், ஓமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி – முதல்வர் உத்தரவு!!
மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் தொற்று பரவல் வழக்குகள் அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்க இன்று மாநிலத்தின் கோவிட் -19 பணிக்குழுவின் கூட்டம் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடத்தப்பட்டது. அதன் முடிவில் மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் ஆரம்பம் முதல் உச்சத்தில் இருந்து வந்தது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு மிகுந்த தீவிர நடவடிக்கைகளை கையாண்டது. மிகுந்த போராட்டத்திற்கு பின்னர், சில வாரங்களுக்கு முன்னர் தான் கொரோனா 2ம் அலையின் பாதிப்பு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சென்றடைந்தது. ஆனால் சமீப நாட்களாக ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று பரவல் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று புனே மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – தேர்தல் ஆணையம் விளக்கம்!!
பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் நைஜீரியாவில் இருந்து தனது இரண்டு மகள்களுடன் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள தனது சகோதரரை சந்திக்க வந்த ஒரு பெண் ஆகியோர் என்று சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஓமைக்ரான் வழக்குகள் அதிகரித்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முடிவெடுக்க இன்று மாநில கோவிட் -19 பணிக்குழுவின் கூட்டம் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடத்தப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தற்போது மாநிலம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022 நிதியாண்டில் இளைஞர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் – முழு விவரங்கள் இதோ!
மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே, மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஓரிரு நாட்களுக்கு பின்னர் நிலைமை மதிப்பிடப்படும் என்றும், ஓமிக்ரான் மாறுபாட்டின் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமான நிலையங்கள், நுழைவுப் புள்ளிகள் மட்டுமின்றி நகரங்களுக்குள்ளும் அதிக எண்ணிக்கையில் சோதனை செய்து வருகிறோம். ஒவ்வொரு வாரமும், கார்ப்பரேட் அலுவலகங்கள் RT-PCR சோதனைகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் சர்வதேச பயணிகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு பயணிகளுக்கு என்று தனி தனியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்:
- தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்கு ஏழு நாள் நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயம்.
- பயணிகள் அந்தந்த சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் உடனடியாக RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் ஏழாவது நாளில் இரண்டாவது சோதனை எடுக்க வேண்டும்.
- சோதனை முடிவுகள் ஏதேனும் ஒரு பரிசோதனையில் கோவிட் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள்.
- ஏழாவது நாளில் கோவிட் பரிசோதனை நெகட்டிவ் என வந்தால், மேலும் ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
- வரும் அனைத்து பயணிகளும் கடந்த 15 நாட்களில் சென்ற நாடுகளின் விவரங்களை அறிவிக்க வேண்டும்.
உள்நாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்:
- மாநிலங்களுக்கு இடையேயான உள்நாட்டு பயணிகளில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இப்போது RTPCR அறிக்கை தேவையில்லை.
- இருப்பினும், ஒரு டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் அல்லது தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.