மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடுதல் சலுகைகள்? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடுதல் சலுகைகள்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடுதல் சலுகைகள்? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடுதல் சலுகைகள்? முழு விவரம் இதோ!

தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடுதலாக 4 கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூடுதல் சலுகைகள்

அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில், அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ 3 சதவீதம் என்ற அடிப்படையில் 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) தொகை நான்கு சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ராதிகா பேச்சை மீறும் மயூ, பாக்கியாவிடம் எரிந்து விழும் கோபி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எபிசோட்!

இந்த கூடுதல் 4 சதவீத உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி தொகை 38 சதவீதத்தை எட்டும். மேலும் இந்த உயர்வு அறிவிப்பால் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லறை பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த பணவீக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஊழியர்களின் டிஏவை அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. அந்த வகையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ 126க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 125.1 மற்றும் 125 ஆக இருந்தது. தொடர்ந்து மார்ச் மாதத்தில் இது 126 புள்ளிகளை எட்டியது. இப்போது AICPI தொடர்ந்து அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் DA 4 சதவீதம் அதிகரிக்கும். இதற்கிடையில் ரூ. 18,000 அடிப்படை சம்பளமாக பெறும் மத்திய அரசு ஊழியர்கள் 34 சதவிகித DA அடிப்படையில் 6,120 ரூபாய் அகவிலைப்படியை பெறுகிறார்கள். தொடர்ந்து டிஏ 38 சதவீதமாக அதிகரித்தால், பணியாளருக்கு அகவிலைப்படி தொகையாக ரூ.6840 கிடைக்கும். அதாவது, அரசு ஊழியர்களுக்கு ரூ.720 கூடுதலாக கிடைக்கும்

இந்த DA உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளரின் பணிக்கொடை பங்களிப்பையும் அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் டிஏவில் இருந்து பிடித்தம் செய்யப்படுவது ஆகும். இது தவிர டிஏ அதிகரிப்பு ஊழியர்களின் போக்குவரத்து அலவன்ஸ் மற்றும் நகர அலவன்ஸ் ஆகியவற்றை அதிகரிக்க வழிவகை செய்கிறது. இதற்கிடையில் மத்திய அரசு, தனது ஊழியர்களின் HRAவை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 27%, 18% மற்றும் 9% அடிப்படையில் HRA தொகையை பெறுகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!