தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் – அரசாணை வெளியீடு!

தமிழக அரசு அதிகாரிகள் தங்களது பணியை திறம்பட செய்யவும், திட்டங்களுக்கு ஏற்றவாறு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு அவர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் அதிகாரம்:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு அனைத்து துறையின் நிர்வாக முறைகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் பள்ளி கல்வி துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிலர் மாற்றம் செய்யப்பட்டனர். அத்துடன் புதிய அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் அரசு துறை செயலர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

கூடுதல் அதிகாரம் குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணை திருத்தம் செய்யப்பட்டு நிதி தொடர்பான வேலைகளில் நிதித்துறையின் ஒப்புதல் பெற தேவையில்லை என்றும் இனி செயலாளர்களே முடிவெடுத்து அனுமதி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ச்சியாக தற்போது நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆபத்து.. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – புயலாக மாற வாய்ப்பு.. மக்கள் அச்சம்!

Follow our Instagram for more Latest Updates

அதாவது நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த பல்வேறு பணிகளுக்காக ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி ஆணையர் பணிகளுக்காக ரூ.10 லட்சம் வரை அனுமதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!