தமிழகத்தில் கூடுதலாக 1030 முதுநிலை பணியிடங்கள் – ஆசிரியர் தகுதி வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை ஆசிரியர் தகுதி வாரியம் வெளியிட்டுள்ளது. அதாவது, கூடுதலாக 1030 முதுநிலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதுநிலை பணியிடங்கள்:
தமிழகத்தில், ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கும் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பணியிடம் நியமிக்கப்படும் என ஆசிரியர் தகுதி வாரியம் அறிவித்துள்ளது. இதனிடையே, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்கு பிறகு கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி 2022 முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரைக்கும் முதுநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் பின்னர், முதுநிலை ஆசிரியர்களுக்கான உத்தேச விடை குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்டது. இதற்கு பிறகு பகுதி பாடவாரியாக ஆசிரியர்கள் மற்றும் பாட வல்லுனர்கள் அழைக்கப்பட்டு விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. அதாவது, பணி விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.
CMC வேலூர் கல்லூரியில் ரூ.33,790/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்
இதன் பின்னர் இறுதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்விற்கான விடை குறிப்புகள் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்வதற்கான முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நடைபெற்று முடிந்த முதுநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வின் மூலம் கூடுதலாக 1030 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக 3237 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.