திருமண பந்தத்தில் இணையும் நடிகை யாஷிகா ஆனந்த் – மாப்பிள்ளை யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என யாஷிகா கூறி வந்த நிலையில் தற்போது ஒரு பதிவை யாஷிகா வெளியிட்டுள்ளார். அதாவது எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்கள், எனக்கு லவ்வெல்லாம் செட் ஆகாது. எனவே இந்த திருமணத்தை செய்துகொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார்.
யாஷிகாவுக்கு திருமணம்:
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் நடித்த முதல் திரைப்படமே இரட்டை அர்த்தத்துடன் ரசிகர்களை மிரள வைக்கும் விதமாக இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் யாஷிகாவிற்கு நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக பெரிய விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் யாஷிகா அவரது தோழியை இழந்தார்.
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!
தோழியை இழந்த துக்கத்தில் இருந்து நீண்ட நாட்கள் வெளியே வராமலே இருந்தார். அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர ரசிகர்களும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறினர். இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நிரூப்பும் பல வருடங்களுக்கு முன்பாக காதலித்தனர். இருவரும் பிரிந்துவிட்டாலும் மனதளவில் அதிக அளவில் அன்பு வைத்திருக்கிறார்கள். நிரூப்பை பார்க்க யாஷிகா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றபோது கூட இருவரும் அவ்வளவு அன்பை வெளிப்படுத்தினர். இதற்கு பிறகு நிரூப்பும் யாஷிகாவும் தான் திருமணம் செய்துகொள்வார்கள் என பல வதந்திகள் பரவியது.
மேலும், பலரும் யாஷிகாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டபடி இருந்தனர். ஆனால் அதற்கெல்லாம் யாஷிகா திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்றே கூறியிருந்தார். ஆனால் தற்போது ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது எனது குடும்பத்தினர்கள் எனக்கு மாப்பிளை பார்த்துள்ளார்கள். நானும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன். எனக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட் ஆகாது. திருமணம் ஆகிவிட்டாலும் கூட தொடர்ந்து உங்களை entertain செய்வேன் என கூறியுள்ளார். உண்மையாகவே யாஷிகாவிற்கு திருமணம் ஆக போகிறதா அல்லது ஏப்ரல் 1 என்பதால் விளையாடுகிறாரா என்பது தெரியாமல் ரசிகர்கள் விழித்து கொண்டிருக்கின்றனர்.