திடீரென்று சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – யாருன்னு தெரிஞ்சுக்கோங்க!
சின்னத்திரை சீரியல்கள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு விறுவிறுப்பாக செல்லும் கதையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், முக்கிய நடிகை ஒருவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
நடிகை யமுனா:
யாரடி நீ மோகினி சீரியலில் பல நாட்கள் போட்டோவில் மட்டும் இருந் வண்ணமும், பின்னர் அச்சுறுத்தும் பேயாகவும் வந்து தனது அசத்தல் நடிப்பால் புகழை அடைந்தவர் நடிகை யமுனா. யாரடி நீ மோகினி சீரியலுக்கு பின்னர் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வந்தார். இந்த சீரியல் முடிந்து விட்ட பின்னர் இவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்க வில்லை.
Follow our Instagram for more Latest Updates
பாக்கியலட்சுமி கோபியின் நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமா – எதிரிக்கும் வர கூடாது!
இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்னதாக விஜய் டிவியின் மதிய நேர தொடரான நம்ம வீட்டு பொண்ணு தொடரின் ஜீவப்பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதில், வித்தியாசமாக ஆண் கெட்டப்பில் தான் சீரியல் முழுவதும் வந்தார். இந்த கதாபத்திரம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த தொடரில் இந்த கதாபாத்திரம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை யமுனா, தான் இனி இந்த சீரியலில் வர மாட்டேன் என்று கூறியுள்ளார்.