‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் சர்ச்சை குறித்து நடிகை வித்யூலேகா விளக்கம் – வைரலாகும் பதிவு!
சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்கி வரும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியை ஆதரித்து, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வரும் வித்யூலேகா ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
குக் வித் கோமாளி
பொதுவாக மக்களை சிரிக்க வைப்பது, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்து வருகிறது. அதுவும் இந்த கால கட்டத்தில் வேலைப்பளு, பிசினஸ் என்று பிசியாக சுற்றிக்கொண்டிருக்கும் மக்களால் ஒரு நிமிடம் நின்று சிரிக்கவோ, எதையேனும் ரசிக்கவோ நேரமில்லை. இப்படிப்பட்டவர்களை கூட விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவை ஒரு முக்கிய அங்கம் வகித்து வருகிறது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஞாயிறு கடைகள் உண்டு!
அதாவது, திரைத்துறையை சேர்ந்தவர்களின் சமையல் திறமையை வெளிக்கொண்டு வரும் இந்த போட்டியில் கோமாளிகள் என சிலர் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்கள் பல்வேறு கலாட்டாக்களை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ‘குக் வித் கோமாளி’ ஷோ பல்வேறு மொழிகளை கடந்தும் வரவேற்புகளை பெற்று வருகிறது. இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்புகளை அடுத்து அதன் 3வது சீசன் சமீபத்தில் துவங்கி இருக்கிறது.
இப்போது, இந்த சீசன் துவங்கிய ஒரு சில நாட்களுக்குள்ளாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. அதாவது, ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் கோமாளியாக கலந்து கொண்டு வரும் பரத்தை, செஃப் வெங்கடேஷ் பட் அடிப்பது போன்றதான சில காட்சிகள் இடம்பிடிக்க அது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இது ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் கலந்து கொள்பவரை அடிப்பது எல்லாம் தவறான செயல் என்று ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மீதும், செஃப் பட் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் இவை எல்லாம் மக்களை சிரிக்க வைப்பதற்காக தான் என்று கோமாளி பரத் மற்றும் செஃப் பட் ஆகியோர் சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு வரும் நடிகை வித்யூலேகா இந்த சர்ச்சை குறித்து சில விளக்கங்களை ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். அதாவது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – கணக்கு தொடங்குவது எப்படி? முழு விபரம் இதோ!
இந்த நிகழ்ச்சியில் நான் நானாக தான் இருக்க போகிறேன். இதில் அடிப்பது போல காட்டப்படும் காட்சிகள் வெறும் சவுண்ட் எபெக்ட் தான். அதை டிவியில் பார்க்கும் போது நிஜமாகவே அடிப்பது போல தான் தெரியும். ஷூட்டிங்கின் போது நாங்கள் எல்லாவற்றையும் என்ஜாய் செய்வோம். அதனால் நீங்களும் ஷோவை பார்க்கும் போது இதே மனநிலையோடு பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை வித்யூலேகாவின் இந்த பதிவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.