நடிகை ஊர்வசிக்கு நேரிட்ட திடீர் சோகம் – தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தார்! ரசிகர்கள் ஆறுதல்!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகையாக வலம் வந்த நடிகை ஊர்வசியின் தம்பி மனைவி வறுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ஊர்வசி
1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஊர்வசி. கேரளா மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட நடிகை ஊர்வசி இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது அக்கா கல்பனாவும் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் தான். இவர்களுக்கு கமல் என்ற ஒரு தம்பியும் உண்டு.
‘ராஜா ராணி’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த ஆலியா மானஸா – கணவர் சஞ்சீவுடன் கோவா விசிட்!
கடந்த 2016ம் ஆண்டு நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனா, ‘தோழா’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் மரணமடைந்தார். இப்படி இருக்க தற்போது நடிகை ஊர்வசியின் தம்பி, மனைவி பிரமிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சிக்குளாக்கி இருக்கிறது. அதாவது, ஊர்வசியின் ஒரே தம்பியான கமல் மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் இறந்து போவதற்கு முன்பாக வறுமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
தாத்தா மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பாக்கியா – கோபி உதவுவாரா? வைரலாகும் ப்ரோமோ!
அதாவது குடும்பத்தை நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த ஊர்வசியின் தம்பிக்கு, அவ்வப்போது பணம் கொடுத்து உதவியது நடிகை கல்பனா தானாம். ஆனால் கல்பனாவின் மறைவுக்கு பிறகு இவர்கள் இருவரும் மிகவும் கஷ்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். இதனால் சாவதற்கு முடிவு செய்த அவர்கள், தங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்ததாகவும் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு கொண்டுள்ளனர். இது தவிர தங்களது வீட்டில் உள்ள பொருளை வைத்து வாடகைக்கு பணம் கொடுத்து விடுமாறும் அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் நடிகை ஊர்வசியின் குடும்பத்திற்கு பெரிய இழப்பாக கருதப்படுகிறது.