சன் டிவி ‘கயல்’ சீரியலில் வில்லியாக களமிறங்கும் நடிகை உமா ரியாஸ்கான் – ரசிகர்கள் உற்சாகம்!
சினிமாவில் பல படங்களில் நடித்து அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை உமா ரியாஸ்கான். அவர் தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் எழிலின் அம்மாவாக களமிறங்க இருக்கிறார்.
நடிகை உமா ரியாஸ்கான்:
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 1ல் பல பிரபலமான நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக களமிறங்கினார்கள். வனிதா, உமா ரியாஸ், ரம்யா பாண்டியன் , பிரியங்கா ரோபோ ஷங்கர், ரேகா, மோகன் வைத்யா, தாடி பாலாஜி , கானா சம்பத் என நட்சத்திர பட்டாளங்கள் வந்த நிலையில் அதில் வனிதா விஜயகுமார் வெற்றி வாய்ப்பை தட்டி சென்றார். தொடக்கத்தில் இருந்து வனிதாவிற்கும் உமாவிற்கு போட்டி நடந்தது.
Exams Daily Mobile App Download
இறுதியில் வனிதா வெற்றி பெற்றார். பின் உமா தனியாக யூடுயூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னுடைய சமையல் திறமையை காட்டி வருகிறார். அவர் இதற்கு முன்னதாக விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டவர். அதன் பின் அவருடைய மகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக வந்தார்.
அவருடைய கணவரும் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி குடும்பமே நடிப்புத்துறையில் பிஸியாக இருந்து வரும் நிலையில் தற்போது நடிகை உமா சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் அவர் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட முன்னணி சீரியலான கயல் சீரியலில் கதாநாயகன் எழிலின் அம்மாவாக களமிறங்கி இருக்கிறார். இதற்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி நடித்து வந்தார். வில்லியாக உமா அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.