பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி தனமாக மாறும் பாக்கியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் அண்ணியாக நடிகை சுஜிதா நடித்து வரும் நிலையில், தற்போது அதில் ஒரு முக்கிய மாற்றம் நடக்க உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிக அளவில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தனம் அண்ணி:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சின்னத்திரையின் முக்கிய தொடராக உள்ளது. விஜய் டிவியில் தற்போது இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு என்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். மிகவும் குடும்ப பாங்கான கதையாக இருப்பதால் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும் கதையின் போக்கு உள்ளது. 4 அண்ணன்,தம்பிகளின் வாழ்க்கையில் மூத்த அண்ணியாக, அவர்களின் குடும்பம் மிகவும் கஷ்டப்படும் சூழலில் வரும் தனம் அண்ணி அந்த குடும்பத்தையும், தம்பியையும் பல தியாகங்களை செய்து முன்னேற்ற உறுதுணையாக இருப்பது தான் கதை.
வெண்பாவை திருமணம் செய்யும் பாரதி, சூழ்ச்சியால் வெல்லும் வெண்பா – கண்ணம்மாவின் முடிவு!
இந்நிலையில், அவருக்கு அடுத்து வரும் மற்ற மருமகள்களும் வீட்டில் உள்ள நிலைமையை அறிந்து அதற்கேற்றாற் போல் மாறிக் கொள்கின்றனர். ஆனால் தனம் அண்ணியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. அவர் சொல்வதை அனைவரும் கேட்கும் நிலைக்கு பழகி விட்டனர். இந்த தனம் கதாபாத்திரமாக நடிகை சுஜிதா தான் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையான வதினம்மா சீரியல் முடிவடைந்து உள்ளதாக சுஜிதா பதிவிட்டிருந்தார்.
அதேபோல், தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்தும் விலக உள்ளார். இதனால் தனம் கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா நடிக்க உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் தங்களின் விருப்பமான சுஜிதா விலகுவதை அறிந்து வருத்தத்தில் உள்ளனர். இன்னொரு புறம் பாக்கியா தான் தனமாக மாறுவதை அறிந்து உற்சாகமும் அடைந்துள்ளனர்.