‘நக்ஷத்ராவை காப்பாற்றவில்லை என்றால் சித்ராவின் நிலைமை தான் இவருக்கும்’ – கதறி அழுத ஸ்ரீ நிதி!
யாரடி நீ மோஹினி சீரியல் மூலமாக பிரபலமான நக்ஷத்திரா தவறான ஒருவரிடம் மாட்டிக் கொண்டுள்ளார் எனவும் நக்ஷத்திராவை காப்பாற்றவில்லை எனில் சித்ராவின் நிலைமை போல் ஆகிவிடும் என ஸ்ரீ நிதி கதறும் படியான வீடியோ வைரலாகி வருகிறது.
நக்ஷத்திரா:
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட யாரடி நீ மோஹினி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் நக்ஷத்திரா. இதே சீரியலில் நக்ஷத்திராவுடன் சேர்ந்து நடித்த ஸ்ரீ நிதி இவருக்கு மிகவும் நெருங்கிய தோழியாக இருந்து வருகிறார். ஸ்ரீ நிதி தற்போது சமூக வலைதள பக்கங்களில் பகிரங்கமாக தாக்கப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் வலிமை திரைப்படம் குறித்து எதிர்மறையாக விமர்சித்ததால் ரசிகர்கள் ஸ்ரீ நிதியை வறுத்தெடுத்து கொண்டிருந்தனர். இதற்கு பின்பு சிம்புவை தான் காதலிப்பதாகவும் என்னையும், அவரையும் சேர்த்து வையுங்கள் என கையில் குங்குமத்துடன் சிம்புவின் வீட்டிற்கு முன்பு நின்று போராட்டம் நடத்தினார்.
தற்போது வரைக்கும் ஸ்ரீ நிதியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து நக்ஷத்திரா குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு மேலும் சர்ச்சையை கிளப்பி வருகிறார். அதாவது நக்ஷத்திராவும் சினித்துறையில் இருக்கும் ஒருவரும் காதலித்தனர். நக்ஷத்திராவிற்கு சொல்லிக் கொள்ளும் படியாக சொந்தங்கள் யாரும் கிடையாது. அம்மா மட்டும் தான் இருக்கிறார். காதலிக்க ஆரம்பித்து ஒரு மாதத்திலேயே இருவரும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். நக்ஷத்திரா இரண்டு லட்சம் வரைக்கும் சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார். ஆனால், தற்போது நக்ஷத்திராவிடம் சுத்தமாக காசு கிடையாது.
Exams Daily Mobile App Download
நல்லவர் என்று நினைத்து ஏமாந்து போய்விட்டார். தற்போது நக்ஷத்திராவை காப்பற்றவில்லை என்றால் சித்ராவின் நிலைமை தான் இவருக்கும். நக்ஷத்திரா தற்கொலை செய்து கொண்டால் கூட ஆச்சரியப்படுவதில் ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு பிரச்சனையில் நக்ஷத்திரா மாட்டிக் கொண்டுள்ளார். இதனால் நக்ஷத்திராவை காப்பற்றுங்கள் என வீடியோவை ஸ்ரீநிதி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீநிதி உண்மையை தான் கூறுகிறாரா அல்லது சிம்புவின் விஷயத்தை போல இதிலும் விளையாடி கொண்டிருக்கிறாரா என ரசிகர்கள் யோசித்து கொண்டிருக்கின்றனர்.