6 வருடம் கழித்து மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நடிகர் விஜய் அம்மாவின் ஃப்ரண்ட் – ரசிகர்கள் உற்சாகம்!
சின்னத்திரை நடிகைகள் மிகவும் பிரபலமாக நடித்து வரும் நிலையில், திருமணம், குழந்தை என்று சில வருடங்கள் சீரியலில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல் தற்போது சன்டிவி சீரியல் நடிகை ஒருவர் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
நடிகை சோனியா:
ஆறு வருடங்களுக்கு முன்னதாக சன் டிவியில் அழகி சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் இல்லத்தரசியாக நடித்தவர் நடிகை சோனியா. இவர் அந்த அழகி சீரியலில் நாயகியாக வரும் சுந்தரி கதாபாத்திரத்திற்கு அதிக உதவிகளை செய்யும் படி கதை இருந்தது. அழகி சீரியல் மிகவும் பிரபலமாக இருந்ததால், அதில் பாசிட்டிவ் வேடத்தில் நடித்த நடிகை சோனியாவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளார். இவர் அந்தமானை பூர்வீகமாக கொண்டவர். அந்த சீரியல் முடிந்த பிறகு திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து 6 வருடங்கள் ஒதுங்கி இருந்துள்ளார்.
விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் இனியா யார் தெரியுமா? – வியப்பில் ரசிகர்கள்!
தற்போது மீண்டும் சன் டிவியில் தனது சீரியல் பயணத்தை தொடங்கியுள்ளார். அருவி என்ற தொடரில் வில்லத்தனமான வேடத்தில் நடிக்கிறார். இவரது ரீஎன்ட்ரி சன் டிவியில் அமைந்திருப்பதால் கூடுதல் சந்தோசமாக இருப்பதாக கூறியுள்ள நடிகை சோனியா, மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். தான் ‘சார்விக்’ஸ் இட்லி / தோசை மாவு’ என்ற தொழிலை நடத்தி வருவதாக கூறினார். தனக்கு மிகவும் பிடித்த நடிப்பையும், தொழிலையும் தான் சிறப்பாக கொண்டு செல்வதாக பூரிப்படைந்துள்ளார்.
“செம்பருத்தி” சீரியல் ஷபானா, ஆர்யன் விவாகரத்து – முதல்முறையாக விளக்கிய நடிகை! ரசிகர்கள் நிம்மதி!
கூடுதலாக, நடிகர் விஜய்யின் அம்மா தனக்கு மிகவும் நெருங்கிய தோழியென்றும் கூறியுள்ளார். இவர் கூறுவதை நம்பமுடியாமல் இருந்த போதிலும், நடிகை சோனியாவின் கணவர் குடும்பம் நடிகர் விஜய் குடும்பத்தினரும் நெருங்கிய குடும்ப நண்பர்களாக உள்ளனர். சோனியா திருமணம் செய்து வந்த பிறகு ஷோபா அம்மாவும், தானும் அதிகம் நெருக்கமாகி விட்டதாகவும், வயதில் தன்னை விட மூத்தவராக இருந்த போதிலும் தாங்கள் நெருங்கிய தோழிகள் என்று கூறியுள்ளார். மேலும், இதுவரை நடிகர் விஜய்யை பற்றி எதுவும் தான் கேட்டதில்லை என்றும், தங்களின் கதையை பேசவே நேரம் போதவில்லை என்றும் கூறியுள்ளார்.