‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? கண்ணனை பார்க்காத வருத்தம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்த நடிகை ஷீலா. ஒரு பேட்டி ஒன்றில் கண்ணனை கடைசி வரை பார்க்க முடியவில்லை என வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இறுதி சடங்கில் நடித்ததற்கு வீட்டில் இருந்தவர்கள் திட்டியதாகயும் கூறி உள்ளார்.
நடிகை ஷீலா:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிகர், நடிகைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மனதில் அழுத்தமாக பதிகின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்து வந்தவர் நடிகை ஷீலா. அவர் அந்த சீரியலில் சில சீன்களில் மட்டுமே வந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இறந்துவிட்டது போல காட்டப்பட்டது. அந்த சீரியலில் இனிமேல் அவர் நடிக்கமாட்டார்.
கண்ணம்மாவாக நடிப்பது கஷ்டம், மனம் திறந்த அஞ்சலி – சுவாரசிய பேட்டி!
அதனால் அவருக்கு வருத்தமாக இருப்பதாக ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் சினிமாவில் பல படங்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் நல்ல வரவேற்பை கொடுத்ததாக அவர் கூறியுள்ளனர். இந்த சீரியலில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாலும் சீரியலில் இருந்து விலகுவது தான் கடினமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தது போல தத்ரூபமாக நடித்ததை அனைவரும் பாராட்டினார்கள்.
கண்ணம்மாவுடன் மீண்டும் இணைந்த பாரதி, ரசிகர்கள் உற்சாகம் – வெளியான புகைப்படம்!
அவருக்கு தெரியாமல் இறுதி சடங்குகள் படப்பிடிப்பு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இறந்த பின்னர் பாடையில் ஏற்றியது கூட அவர்கள் சொன்னார்கள், நான் மறுப்பு எதுவும் சொல்லாமல் செய்தேன் என் வேலை அதான என்று அவர் தெரிவிக்கிறார். மேலும் கண்ணனை கடைசி வரை பார்க்காதது வருத்தமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் நடித்ததற்கு வீட்டில் இருப்பவர்கள் திட்டினார்கள்.