“நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட “வைதேகி காத்திருந்தாள்” சீரியலில் கதாநாயகியாக நடித்த சரண்யா துராடி சீரியல் திடீரென நிறுத்தப்பட்டதால் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு மற்றொரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கி இருக்கிறது.
நடிகை சரண்யா துராடி:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்களே மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறது. அந்த வகையில் பல புதிய சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட “வைதேகி காத்திருந்தாள்” சீரியல் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வந்தனர். அந்த தொடர் 39 எபிசோட்டுகள் மட்டும் ஒளிபரப்பாகிய நிலையில் பாதியிலே நிறுத்தப்பட்டது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ஷாக்கிங் தகவல்!
அந்த சீரியலில் நடிக்கும் சரண்யா ஏற்கனவே விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். அந்த சீரியலும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனால் அவர் நடித்த சீரியல்கள் நிறுத்தப்படும் என பல கமெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த சிறந்த சரண்யா உண்மையான உழைப்பிற்கு மரியாதை கொடுங்கள் என விளக்கம் அளித்து இருந்தார். அந்த சீரியல் நிறுத்தப்பட்டதால் அதில் கமிட் ஆன பலர் வருத்தத்தில் இருந்தனர்.
குறைவான TRP தான் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட காரணமாக இருந்தது. இந்நிலையில் அந்த சீரியலில் நடித்த சரண்யாவிற்கு விஜய் டிவியில் முன்னணி சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு போலீஸ் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த சீரியல் குழுவுடன் சரண்யா எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.