திடீரென நிறுத்தப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – நடிகை சரண்யா உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
திடீரென நிறுத்தப்பட்ட 'வைதேகி காத்திருந்தாள்' சீரியல் - நடிகை சரண்யா உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!
திடீரென நிறுத்தப்பட்ட 'வைதேகி காத்திருந்தாள்' சீரியல் - நடிகை சரண்யா உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!
திடீரென நிறுத்தப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் – நடிகை சரண்யா உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி வந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் சில பல காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த சீரியலில் நடித்திருந்த நடிகை சரண்யா வெளியிட்ட பதிவு ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகை சரண்யா

தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான சரண்யா துராடி விஜய் டிவியின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் மூலம் நடிகையாக உயர்ந்தார். தொடர்ந்து ‘ஆயுத எழுத்து’ உள்ளிட்ட சில சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த நடிகை சரண்யா, சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இப்படி இருக்க ஒரு சில மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விஜய் டிவியின் ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் வைதேகியாக என்ட்ரி கொடுத்திருந்தார் நடிகை சரண்யா.

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த குரங்கு, சீண்டிய போட்டியாளர்கள் – எச்சரித்த பிக்பாஸ் குரல்!

அந்த வகையில் ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடர் வெளியாகி வெறும் 37 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருந்த நிலையில் இந்த சீரியல் தீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த சீரியலில் விஜய் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ப்ரஜன் சமீபத்தில் சீரியலை விட்டு விலகினார். அதாவது ப்ரஜனுக்கு சினிமா திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரால் சீரியலில் தொடர முடியவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ப்ரஜனுக்கு பதிலாக இந்த சீரியலில் ‘ராஜபார்வை’ நடிகர் முன்னா களமிறங்கினார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலின் ஒளிபரப்பு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சீரியல் முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்த சீரியலில் நடித்து வந்த நடிகை சரண்யா, ‘இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருப்பதை தேர்ந்தெடுப்பது சரியானது. கடினமான காலங்களில் என்னுடன் நின்றதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒருவரது உழைப்பு இவ்வளவு எளிதாக குப்பையில் விழுந்தால் எப்படி வலிக்கும் என்று யோசிக்காமல் முடிவுகளை எடுக்க கூடாது. நான் இப்போது உடைந்திருக்கிறேன்.

BB Ultimate Promo | ஷாரிக்கை பாதாள சிறையில் அடைக்க சொன்ன வனிதா – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

ஆனால் ஒரு நாள் இதை விட பலமாக திரும்பி வருவேன்’ என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதனை வைத்து பார்க்கும் போது ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் ஏதொருவொரு முக்கிய பிரச்சனை நடந்திருப்பதாக ரசிகர்கள் கணித்துள்ளனர். என்றாலும் இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இப்போது நடிகை சரண்யா வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு, ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யன் ‘இருண்ட நாட்களை கண்டவர்கள் தான் பிரகாசமான ஒளியை பெற முடியும். கடவுள் நல்லவர். பலமாக இருங்கள்’ என்று ஆறுதலை தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!