விவாகரத்திற்கு பின்னர் சமந்தாவிற்கு அடித்த ஜாக்பாட் – என்ன தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது புதிய படம் ஒன்றில் சவாலான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படம் குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா:
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமாவில் நாட்டம் கொண்ட சமந்தா ஆரம்பத்தில் சிறிய விளம்பரங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமா வாய்ப்பை பெற்று அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்தார். தமிழிலும், தெலுங்கிலும் ரொம்ப பிசியாக நடித்து வந்த சமந்தா தெங்கின் முன்னணி நடிகரான நாகசைதன்யாவை காதலித்து வந்தார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லைக்கு பிறந்தநாள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
இந்த நிலையில் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னும் இருவரும் வழக்கம் போல தொடர்ந்து படங்களில் நடித்து வந்தனர். அண்மையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தது.
தமிழ் சின்னத்திரையில் நம்பர் 1 இடத்தை பிடித்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – கொண்டாட்டத்தில் குழுவினர்!
விவாகரத்திற்கு பிறகு நடிகை சமந்தா படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஆரென்ச்ஜ்மென்ட் அப் லவ்’ என்ற ஹாலிவுட் படத்தில் bisexual தமிழ் பெண்ணாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது குறித்து பேசிய சமந்தா பிலிப் ஜான் இயக்கத்தில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ‘ஆரென்ச்ஜ்மென்ட் அப் லவ்’ படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் சவாலானது இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். சமந்தா ஏற்கனவே பிலிப் ஜான் இயக்கத்தில் ஓ பேபி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.