தனது காதல் கணவரை பிரிகிறாரா நடிகை சமந்தா? விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. அவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சமந்தா லவ் ஸ்டோரி படத்திற்காக நாக சைதன்யாவை வாழ்த்தியுள்ளார். அதற்கு “நன்றி சாம்” என சமந்தாவிற்கு பதில் கொடுத்துள்ளார் சைத்தன்யா.
நடிகை சமந்தா:
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகைகளின் வரிசையில் வந்தவர் நடிகை சமந்தா. அவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நல்ல படங்களை கொடுத்துள்ளார். அதன் மூலமாக தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்காக அர்ஜுன் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்!
சொல்ல போனால் அவர் திருமணத்திற்கு பின் தான் படு கவர்ச்சியாக நடிக்க தொடங்கி உள்ளார். ஆனால் அதையே அவர் சாதகமாக பயன்படுத்தி கொண்டாதால் குடும்பத்திற்குள் அவப்பெயர் உண்டாகி விட்டதாக சமந்தாவை கணவர் கடிந்துக்கொண்டதாகவும் அதனால் அவர் வீட்டில் இருந்து வெளியேறியதோடு சமந்தா அக்கினேனி என்ற தனது பெயரை எஸ் என்று மட்டும் மாற்றிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியது. இதனால் அவர் கணவரை விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் கமெண்ட்ஸ்!
ஆனால் அது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இருவர் தரப்பில் இருந்தும் வெளியாகவில்லை. இந்நிலையில் வருகிற 24 ஆம் தேதி நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள ‘லவ் ஸ்டோரி’ எனும் படத்தின் புரமோஷன் வேலைகளில் கலந்து கொள்வதற்காக நேர்காணல் ஒன்றில் நாக சைதன்யா பங்கேற்றுள்ளார். அதில் என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்காதீங்க என தெரிவித்துள்ளார். மேலும் சமந்தா லவ் ஸ்டோரி படத்திற்காக நாக சைதன்யாவை வாழ்த்தியுள்ளார். அதற்கு “நன்றி சாம்” என சமந்தாவிற்கு பதில் கொடுத்துள்ளார் சைதன்யா. இதனால் அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கிறார்களா என்பது தொடர்கதையாகவே உள்ளது.