கோவாவில் இடம் வாங்கிய நடிகை சமந்தா – வெளியான தகவல்!
தமிழ் சினிமா வரலாற்றில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை சமந்தா. அவர் தற்போது கோவா கடற்கரையை ஒட்டி ஒரு இடத்தை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா:
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அந்த படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது. இந்த படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கில் ஹீரோயின் ஆக அறிமுகமானார் சமந்தா. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார்.
முதன் முறையாக இணையும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & ஷிவாங்கி – வெளியான தகவல்!
தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல், இரும்புத்திரை, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதேபோல் தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அவர் தன்னுடன் முதல் படத்தில் நடித்த நடிகர் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர் இந்தியாவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவில் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். தற்போது கோவாவில் ஒரு இடத்தை வாங்கி உள்ளாராம். அங்கு பார்ம் ஹவுஸ் கட்ட வேலைகள் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அவர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் விரைவில் கோவாவிற்கு இருப்பிடத்தை மாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.