சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து பிரச்சனை – முதல்முறையாக மனம் திறந்த நடிகை!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவரான சமந்தா, தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை சமந்தா:
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது தெலுங்கில் சகுந்தலம், தமிழில் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அஜித்தின் ‘வலிமை’ 2022 பொங்கலுக்கு ரிலீஸ் – போனிகபூர் அறிவிப்பு! ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அவரது குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கிவிட்டார். அன்று முதல் இவர்களுக்கு இடையில் தற்போது விரிசல் விழுந்துள்ளதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்து இரு தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த விவாகரத்து தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? கண்ணனை பார்க்காத வருத்தம்!
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இதுபற்றி ஏற்கனவே ஆயிரக்கணக்கான பதிவுகள் வந்து விட்டன. இன்னும் வந்துகொண்டே இருக்கிறது. ஏதாவது சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தால் எனக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றினால் சொல்லுவேன். இதற்கு முன்பு வந்த வியாக்கியானங்கள், விவாதங்கள், சந்தேகங்கள் போன்றவற்றுக்கெல்லாம் நான் எப்போதாவது விளக்கம் கொடுத்து இருக்கிறேனா? அல்லது கண்டனம் தெரிவித்து இருக்கிறேனா? சினிமாவில் நூறு சதவீதம் எனது வேலையை செய்து வருகிறேன். எதையும் என்னால் செய்ய முடியாது என்று நினைத்தது இல்லை. எல்லாம் சிறப்பாக அமைந்தால் தான் ஒரு படம் வெற்றி பெறும். எப்படித்தான் நன்றாக நடித்தாலும், நல்ல இயக்குனரும், கதையும் இல்லாவிட்டால் சிறப்பாக அமையாது. கொரோனா எல்லோரது வாழ்க்கையையும் மாற்றி விட்டது என தெரிவித்துள்ளார்.