சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நடிகை ரேஷ்மா – கவலையில் ரசிகர்கள்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” என்ற சீரியலில் இருந்து நடிகை ரேஷ்மா விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ரேஷ்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா. இவர் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலமாக மிகவும் பிரபலமான நடிகையாக உருமாறினார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கில தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், செய்தியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
NEET PG தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – NBE அறிவிப்பு!
பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்து பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இது மட்டும் அல்லாமல் இவர் பல விளம்பரங்கள், தொடர்கள் என்று பலவற்றில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” சீரியலிலும் வந்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
TN Job “FB Group” Join Now
ஆனால், தற்போது அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியலில் இனி அவருக்கு பதில் நடிகை வினோதினி நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் நடிகை ரேஷ்மாவின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.