விஜய் டிவியில் மீண்டும் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சரண்யா துரதி. அவர் மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை சரண்யா துரதி:
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா துரதி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆனார். இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் சென்னை ஆகும். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி நிருபராக 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் லட்சுமியின் சினிமா டூ சீரியல் பயணம் – ரக்சாவின் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அந்த தொலைக்காட்சியில் பணிபுரியும் போது, அவருக்கு இரண்டு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ என்ற தெலுங்கு மொழி தொடரில் நடித்தார். இந்த தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்ற தொடரின் தெலுங்கு மொழி மறு ஆக்கம் ஆகும். அதே ஆண்டில் சன் தொலைக்காட்சியில் தொடரான ரன் என்ற தொடரில் ‘திவ்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா நடித்துள்ளார். அத்தியாயம் 86 இருந்து அந்த தொடரில் விலகி விஜய் தொலைக்காட்சியில் ஆயுத எழுத்து என்ற தொடரில் நடித்தார்.
மல்லிகாவால் தனத்திற்கு வரப்போகும் ஆபத்து – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!!
ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. எப்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டு ஆக்டீவாக இருந்த சரண்யா இப்போது புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் அந்த சீரியலின் புரொமோ ஷுட் அண்மையில் நடந்துள்ளது. அதனால் மீண்டும் அவரை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.