விஜய் டிவி பிரபல சீரியல் நடிகைக்கு படக்குழுவினருடன் கருத்து வேறுபாடு – வெளியான தகவல்!
விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ரக்ஷிதா சீரியலில் இருந்து விலகிவிட்டதாக பேசப்பட்ட நிலையில், சீரியலில் கேரக்டரை மாத்துவதால் நடிகை அதிருப்தி என்று ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாம் இருவர் நமக்கு இருவர்:
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மற்ற தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுகொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பினாலும் மக்கள் மனதை கவரும் வகையில் விஜய் டிவி சீரியல்கள் உள்ளது. அதில் ஒன்று தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல், இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. அவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த சீரியல் குழுவினர் சிலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழில் நாச்சியார் சீரியலில் நடித்து வந்தார்.
‘தவறு இருந்தால் மன்னியுங்கள்’ – தி பேமிலி மேன் வெப்சீரிஸ் நடிகை சமந்தா பேட்டி!
பின்னர் அவரது கணவர் தினேஷ் உடன் இணைத்து ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியலில் நடித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்தில் நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் வராத அவர் இரண்டாவது சீசனில் நடிக்க வேண்டும் என படக்குழுவினர் அவரை அணுகினர். அதன் பின்னர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 2ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் அவர் திரையில் காட்டப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் சீரியலில் இருந்து விலகி விட்டதாக ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டதற்கு “நான் சீரியல்ல இருக்கேனா, இல்லையாங்கிறதை சீரியலின் இயக்குனர் வசனம் எழுதறவங்ககிட்ட போய் கேளுங்க” என்று கோபமாக பதிலளித்துள்ளார். இது குறித்து விசாரித்த போது, சீரியலில் அவரது கேரக்டர் மாறுவது மாதிரி இருக்கிறது என்று ரக்ஷிதா வருத்தத்தில் இருப்பதாக சீரியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சீரியலில் இதுவரை நல்லவளாக இருந்து வந்த ரக்ஷிதாவின் கதாபாத்திரத்தை கெட்டவளாக மாற்றுகிறார்கள் என்று தனக்கு நெருக்கமான சிலரிடம் வருத்தப்பட்டதாக சொல்கிறார்கள். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விவகாரம் குறித்து, ரக்ஷிதா இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அவர் தற்போது கன்னட படத்தில் நடித்து வருகிறார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.