விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ வாய்ப்பை தவறவிட்ட பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. அவரை பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ள அழைத்தும் முடியாது என சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ரட்சிதா:
விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. அந்த சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். இவர் கணவரும் சீரியல் நடிகர் தான், இருவரும் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் களமிறங்கினர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சீரியல் நிறுத்தப்பட்டது. அதன் பின் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்திலுடன் நடித்து வருகிறார்.
நாகசைதன்யா, சமந்தா திருமண வாழ்க்கை முறிவு – கூட்டாக விவாகரத்து அறிவிப்பு!
கர்நாடகாவைச் சேர்ந்த இவர் தொடர்ந்து தமிழில் சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவருடைய மார்கெட் நன்றாகவே இருக்கிறது. ஆனால் சில குறிப்பிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேச தெரியாமல் பேசி, சர்ச்சையில் சிக்கி விடுகிறார். அதனால் பல ஷோக்களை புறக்கணித்து வெறும் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் – வெளியான ப்ரோமோ!
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ள இவருக்கு அழைப்பு விடப்பட்டதாம். ஆனால் இவர் நடிப்பு மட்டும் போதும் என தனது கொள்கையில் உறுதியாக இருப்பதால், பிக்பாஸ் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும் வேண்டாம் என தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் சீசன் 5 நாளை மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.