மீண்டும் சீரியலில் அம்மன் வேடத்தில் களமிறங்கும் நடிகை ரட்சிதா – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் நடித்து வந்த நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை ரட்சிதா:
விஜய் டிவி சீரியல்கள் மக்களிடம் எந்த அளவு ஆதரவு பெறுகிறதோ அந்த அளவு அதில் நடிக்கும் நட்சத்திரங்களும் பெற்றுள்ளனர். மக்கள் அவர்களை வீட்டில் ஒருவர் போல பார்க்கும் அளவிற்கு நெருக்கமாக நினைக்கின்றனர். ஆனால் கடந்த வாரம் முதல் பல முன்னணி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் சீரியலில் இருந்து விலக இருப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்தவர் ரட்சிதா மகாலக்ஷ்மி.
தமிழ் சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்த சன் டிவியின் ‘கயல்’ – பின்தங்கிய ‘பாரதி கண்ணம்மா’!
அவர் விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அறிமுகமானவர். அந்த சீரியலில் நடிகர் மிர்ச்சி செந்தில் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார், மக்களிடம் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திடீரென ரட்சிதா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் பிரபல கன்னட நடிகருடன் கன்னட படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதனால் தான் சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்திருந்தார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஜீவா வெங்கட் எமோஷனல் பதிவு – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்நிலையில் ரட்சிதா மீண்டும் ஒரு புதிய சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அந்த சீரியலில் அவர் அம்மன் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். அச்சு அசலாக அம்மன் போலவே அவர் மேக்கப் பொட்டு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். மேலும் சீரியல் குறித்த முழு விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் என்ன சீரியல் என யூகித்து சொல்லுங்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.