சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து நடிகை திடீர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியா தற்போது அந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கண்ணான கண்ணே:
சன் டிவியில் ரோஜாவுக்கு அடுத்தப்படியாக பலரின் உள்ளம் கவர்ந்த சீரியலாக கண்ணான கண்ணே சீரியல் உள்ளது. இந்த சீரியலில் யுவா- மீரா ஜோடிக்கு பயங்கரமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர்களின் காதல் காட்சிகள், ரொமான்ஸ் என சோஷியல் மீடியாவில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. அப்பா மகளின் பாச போராட்டத்தை சொல்லும் இந்த கதையில் பிருத்விராஜ் அப்பாவாக நடிக்க, அவரின் வெறுப்பை சம்பாதிக்கும் மகளாக மீரா ரோலில் நடிகை நிமிஷிகா நடிக்கிறார்.
முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்!
மேலும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை மீரா நடிக்கிறார். இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாகவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற தொடரில் நடித்து இருந்தார். பிறகு சாக்லேட் என்ற தொடரிலும் நடித்து இருந்தார். இந்த தொடர் 200 எபிசோடுகளை தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை பிரியா நடித்து வருகிறார். இந்த கதையில் இவருக்கு இது முக்கியமான கதாபாத்திரம் ஆகும். இந்நிலையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் சீரியலில் விலகுவதற்கான காரணம் என்ன என்று அவரது பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.