‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இணைந்த சன் டிவி பிரபல நடிகை பவித்ரா – வரவிருக்கும் திருப்பங்கள்!
விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் தற்போது புதிய திருப்பங்கள் வர இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்காக ஒரு புதிய கதாபாத்திரம் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார்.
நடிகை பவித்ரா:
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முதல் சீசனில் இரட்டை வேடத்தில் தான் ஹீரோ செந்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பினாலும், கதையின் புதிய அதிரடி திருப்பங்களினாலும் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று, மிகவும் நல்ல ரேட்டிங்கை பெற்று சென்று வந்தது. இரண்டு கதாநாயகிகளும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள், இதனால் கொரோனா கால ஊரடங்கு நேரத்தில் அவர்கள் மீண்டும் இங்கு வந்து நடிக்க முடியாமல் இருந்தது. ஆனால் அந்த இரண்டு ஜோடிகளுக்குமே அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர்.
நடிகை ஊர்வசிக்கு நேரிட்ட திடீர் சோகம் – தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தார்! ரசிகர்கள் ஆறுதல்!
இதனால் அந்த கதையை அப்படியே நிறுத்தி விட்டு சீசன் 2 ஆரம்பித்தார்கள். அதில் மாயன், மாறன் என்ற இரட்டை வேட அண்ணன், தம்பிகளின் கதையாக உள்ளது. முதலில் மாயனுக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்து வந்தார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் செரிலைன் இருந்து விலகினார். அவரது மகா என்ற வேடத்தில் மோனிஷா நடித்து வருகிறார். தற்போது மாறனுக்கு ஜோடி சேர்க்கும் பணி சீரியலில் நடந்து வருகிறது.
தாத்தா மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் தவிக்கும் பாக்கியா – கோபி உதவுவாரா? வைரலாகும் ப்ரோமோ!
இதற்கான ப்ரோமோ வெளியான நிலையில், மகாவின் அப்பா உறவுக்கார பெண்ணாக ஒரு குடும்பம் வந்து இறங்குகிறது. அதில், மாறனுக்கு ஜோடியாக நடிகை பவித்ரா வந்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ள பவித்ரா, சன் டிவியின் நிலா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கிராமத்து கதாபாத்திரமாக வந்துள்ள பவித்ரா வெளிநாட்டில் வளர்ந்த மாறனுக்கு ஜோடியானால் கதையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.