ஜீ தமிழ் “செம்பருத்தி” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழில் 1000 எபிசோடுகளை கடந்து மக்களின் விருப்பமான சீரியலாக ஒளிபரப்பாகி வருவது தான் செம்பருத்தி. இந்த சீரியல் முடிவு எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இப்போதைக்கு முடியாது என்பது போல பிரபல நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
செம்பருத்தி சீரியல்:
தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி டாப் வரிசையில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல திருப்பங்களுடன் கதை கொண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில் 1000 எபிசோடுகளை கடந்தும் மக்களின் மனதில் இந்த சீரியல் இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ராமன் நடித்து வருகிறார். மேலும் கதாநாயகியாக நடிகை ஷபானா நடித்து வருகிறார். இந்த கதையில் பல ஆன்மீக காட்சிகள் வைக்கப்பட்ட நிலையில் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பார்வதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த சந்தியா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஜீ தமிழில் மூன்று ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க ஆனால் இப்போதைக்கு கதையில் முடிவு எதுவும் வராது என்பது போல இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது கதையில் சுவாரசியத்தை அதிகரிக்க சீரியலில் புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது செம்பருத்தி சீரியலில் வழக்கறிஞராக நடிகை நிஷா களமிறங்கி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் அவர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஜீ தமிழில் முன்னணி சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் அவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன் பின் பல ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்த அவர் தற்போது ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் அவர் என்ட்ரி கொடுத்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இனி கதையில் பல சுவாரஸ்யங்கள் வரும் என்பதில் சந்தேகமில்லை.