5 வருட இடைவெளிக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் மகிழ்ச்சி!
கனா காணும் காலங்கள், மஹாபாரதம், சரவணன் மீனாட்சி, தலையணை பூக்கள் முதலிய சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நிஷா கிருஷ்ணன் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செம்பருத்தி சீரியல்:
90’ஸ் இளைஞர்களின் விருப்பமான சீரியல் என்றால் அது நிச்சயமாக கனா காணும் காலங்கள் சீரியல் தான். இந்த சீரியல் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் நிஷா கிருஷ்ணன். கனா காணும் காலங்கள் சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலையும் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட மஹாபாரதம் சீரியலில் திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் நடித்த அனைத்து கதாபாத்திரமுமே ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமானது.
EPFO உறுப்பினர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் பிறந்த தேதி மாற்றும் வழிமுறைகள் இதோ!
சீரியல்களையும் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதுவரை சீரியலில் துணை கதாபாத்திரமாகவே அறிமுகமாகி வந்த நிஷா கிருஷ்ணன் முதன் முறையாக தலையணை பூக்கள் சீரியல் மூலமாக தான் கதாநாயகியாக அறிமுகமானார். சீரியல்களில் நடித்தது மூலமாக திரைப்பட வாய்ப்புகளும் வர துவங்கியது. நான் சிகப்பு மனிதன், இவன் வேற மாதிரி போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். நிஷா கிருஷ்ணனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
திருமணத்திற்கு பிறகு நிஷா கிருஷ்ணன் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நெஞ்சம் மறப்பதில்லை எனும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். பின்பு எதிர்பாராத நேரத்தில் சீரியலில் இருந்து விலகினார். 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஜீ தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி எனும் சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.