‘யாரடி நீ மோகினி’ நட்சத்திரா களமிறங்கும் வள்ளி திருமணம் சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகை நக்ஷத்ரா. அவர் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் “வள்ளி திருமணம்” என்ற சீரியலில் நடிக்க இருக்கிறார். அந்த சீரியல் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் ஒன்றை அவர் அளித்துள்ளார்.
வள்ளி திருமணம்:
யாரடி நீ மோகினி சீரியல் தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்தது. இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நக்ஷத்ரா நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக முத்தரசு கதாபாத்திரத்தில் முதலில் சஞ்சீவ் நடித்து வந்தார். அதன் பின் அவர் அந்த சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதிலாக ஸ்ரீ குமார் நடிக்க தொடங்கினார். மேலும் சீரியல் வில்லியாக சன் டிவி கயல் சீரியலில் கலக்கி வரும் சைத்ரா நடிக்க தொடங்கினார்.
“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் தாமரை வாங்கிய சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!
ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ரசிகர்களிடம் எப்படி கிளைமாக்ஸ் இருக்க வேண்டும் என கருத்து கேட்டு இரண்டு முடிவு காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும் இறுதி காட்சிகளில் மக்கள் பிரமிப்பு அடையும் வகையில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அந்த சீரியல் முடிந்து ஸ்ரீகுமார் தற்போது சன் டிவி வானத்தை போல சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த நக்ஷத்ரா புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.
ராஜா ராணி 2 சந்தியாவாக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா – ஷாக் ப்ரோமோ!
அதாவது அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “வள்ளி திருமணம்” சீரியலில் நடிக்க இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த சீரியல் குறித்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார். அதில் இந்த சீரியல் காதல் கதையை அடிப்படையாக கொண்டது. இதில் காயத்ரி ஜெயராம், ஷியாம் மற்றும் நளினி ஆகியோர் முன்னணி நடிகர்களாக களமிறங்கி இருக்கின்றனர். இது குறித்து அவர் கூறுகையில், இந்த சீரியல் பெயரை கேட்டால் வள்ளி திருமண நாடகத்தில் வரும் கதையாக இருக்கும் என ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லாமல் ஒரு காதல் காட்சிகளை நவீன மையமாக கொண்டு இந்த சீரியல் கதை இருக்கும் என அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.