ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை குஷ்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
ஊரடங்கு காலத்தில் அதிகளவு திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் சீரியல்கள் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் வெள்ளித் திரையில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நட்சத்திரங்கள் சீரியலில் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தற்போது குஷ்பு ஜீ தமிழ் சீரியலில் களமிறங்கி உள்ளார்.
கோகுலத்தில் சீதை:
கொரோனா பரவல் காரணமாக திரைப்படங்கள் குறைந்துள்ளதால் தற்போது சின்னத்திரை சீரியல்கள் மவுசு அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஜீ தமிழ், விஜய் டிவி என போட்டி போட்டுகொண்டு புதுப்புது சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கி உள்ளன. அதுமட்டுமல்லாமல் சீரியல்களில் மக்கள் விரும்பும் கதைகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் கெஸ்ட் ரோல் போல முன்னணி நடிகர், நடிகைகளை அழைத்து TRPயை அதிகப்படுத்துகின்றனர்.
‘கண்ணான கண்ணே’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியலில் டான்ஸ் மாஸ்டர் நந்தா மற்றும் கதாநாயகியாக புதுமுக நடிகை ஆஷா கவுடா நடித்து வருகிறார். மாறுபட்ட கதையுடன் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சீரியலில் வெள்ளித் திரையில் பிரபலமான நடிகைகள் நளினி, வடிவுக்கரசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த சீரியலுக்கு கூடுதல் அழகு சேர்க்க 90’ஸ் கனவுக் கன்னி குஷ்பு களமிறங்கி உள்ளார். முன்னதாக அவர் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில், பின்னர் குணச்சித்திர நடிகையாக இருந்தார். பிறகு சின்னத்திரையில் கால்பதித்த குஷ்பு, குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் ஆல் ரவுண்டராக உள்ளார். தற்போது இந்த சீரியலில் இவர் என்ட்ரி கொடுத்து உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.