விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய அஞ்சலி ஸ்வீட்டி? ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி மனோகரன் தற்போது புதிய சீரியலில் கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியல் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் அடுத்த கட்டத்திற்கு கதை நகர்ந்து செல்கிறது. பாரதி கண்ணம்மாவும் எப்போது சேர்ந்து வாழ தொடங்குவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து வாழ இருப்பது போலவும் கண்ணம்மாவை பாரதி மனதார ஏற்றுக் கொள்வது போலவும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஆனால் பாரதி ஏதோ கோரிக்கை ஒன்றை கண்ணம்மாவிற்கு சொல்ல இருக்கிறார்.
அதை கண்ணம்மா ஏற்றுக் கொண்டு பாரதி உடன் சேர்ந்து வாழ தொடங்குவாரா என அடுத்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். இப்படி சீரியல் சூடு பிடித்துள்ள நேரத்தில் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் வேறு ஒரு தொலைக்காட்சியில் கமிட்டாகி வருவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சீரியலில் முக்கிய கதாபாத்திரமான வில்லி வெண்பா ரோலில் நடிக்கும் பரீனா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அபி டெய்லர் சீரியலில் நடிக்க இருக்கிறார்.
அதனால் அவர் சீரியலில் இருந்து விலகிடுவாரா, பாரதி கண்ணம்மா சீரியல் முடிய போகிறதா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் மற்றொரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதாவது சீரியலில் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான அஞ்சலி ரோலில் நடிக்கும் கண்மணி மனோகரன் தற்போது ஜீ தமிழில் புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக அருண் பத்மநாபன் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் அது குறித்து எந்த கூடுதல் தகவலும் வெளியாகவில்லை.