பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் வெண்பா? அவரே கொடுத்த விளக்கம்!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் வில்லியாக நடித்து வரும் ஃபரீனா அசாத், இனி அந்த சீரியலில் நடிப்பாரா? மாட்டாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு அவரே பதில் அளித்துள்ளார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பட்டு வருகின்றது. அதில் அதிக கவனம் பெற்றது “பாரதி கண்ணம்மா” சீரியல் தான். எதார்த்தமான கதைக்களத்துடன் இருக்கும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் ஹீரோ மற்றும் ஹீரோயின் எந்த அளவிற்கு முக்கியமாக காட்டப்படுகிறார்களோ, அதே அளவிற்கு வில்லியாக நடித்து வரும் வெண்பா கேரக்டருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா நடித்து வருகிறார்.
கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம், தீவிர சிகிச்சை – தோழி பரிதாப பலி!
சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அந்த தொடரில் பாரதி திருமணமானவர் என்று தெரிந்தும், அவரை தொடர்ந்து காதலித்து வருகிறார். இப்படியாக இருக்க, ஃபரீனா கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு இருந்தார். இதனால் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, இனி “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஃபரீனா நடிப்பாரா? மாட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். வெண்பா கேரக்டரில் இனி ஃபரீனா நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதில் வேறு ஒருவர் நடிக்க வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்பட்டது. அதே போல் இன்னும் சிலர் ஃபரீனா இன்னும் சில நாட்களுக்கு சீரியலில் காட்டப்பட மாட்டார் என்றும் தெரிவித்து வந்தனர். இதற்கு தற்போது ஃபரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர் கூறியதாவது, ‘பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நான் நடிப்பேன். அந்த சீரியலில் நடிப்பதில் நான் கம்ஃபர்டபிளாக உணர்கிறேன். பிரசவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரேக் எடுத்து கொள்வேன். அதன் பிறகு வெண்பாவாக ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடிப்பேன். எனது ரசிகர்களை மகிழ்விப்பதில் எனக்கு மகிழ்ச்சியே’ இவ்வாறாக தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.